தம்பி பாவனா என்ன கொடுமை இதுவும் கும்மியா?


தம்பிக்கும் பாவனாவுக்கும் சண்டை அதை தீர்க்க பஞ்சாயத்து பன்னுகிறேன் பேர்வழின்னு கையில சொம்போட போன அபி அப்பா பூங்காவுல நானு இருக்கேன் அங்க வந்து என்ன ரெண்டு பேரும் பாருங்கன்னு ஒரு மொக்கை விளம்பரம் கொடுக்க எங்க மொக்கை நடந்தாலும் நான் அங்க இருப்பேன்ன்னு குசும்பனும் வலுக்கட்டாயமா அங்க வந்து சேந்துகிட்டார். சண்டை என்னன்னே தெரியாம கோபி அங்கயும் போன் பண்ணி ரிப்பீட்டேய் சொல்ல கொலைவெறி கொண்ட தம்பி பாவனாவே வேண்டாம் நான் பாண்டிமடம் போகிறேன் என்று "எங்கே செல்லும் இந்த பாதை பாட்டோட்டு இடத்தை காலிசெய்த இன்று மதியமே தன் கொலை வெறியெல்லாம் தீர்த்துக்கொள்ள அபி அப்பாவை பழிவாங்குவதே நோக்கம் என்றவர் ஒரு பூங்கா பதிவுக்கு கொலைவெறிப் பின்னூட்டினார். சிறுமை கண்டு அஞ்சாத அமீரக அடலேறு, அன்பும் பேரன்பும் மட்டுமே( பாவனாவிடம் மட்டும்) கொண்ட அமீரக அர்னால்டு தம்பியின் புஜ பல பராக்கிரமம் கண்ட பாவனா மாமா நீ இல்லேன்னா நான் இல்ல்லேன்னு சொல்ல ஆணி புடுங்குன களைப்புல ஊட்டுக்கு வந்த தம்பி உற்ச்சாக மிகுதியில ஆட்டத்த ஆரம்பிக்க கதவை உள்ள இருந்து தொறந்தது நம்ம தங்கச்சி பாவனா. பாவனாவுக்கு எப்பவும் ஒரு கெட்டபழக்கம் சந்தோஷம் வந்துச்சின்னா என்ன கையில இருந்தாலும் கெடாசிடுவாங்க அப்படி என்னத்த இப்ப வீசுறங்கன்னு பாருங்க மக்கா.

இன்னும் நல்லா கலாய்க்கிற ஸ்க்ரிப்டொட வாங்கப்பா யாராவது கான்செப்ட சொல்லுங்க க்ராபிக்ஸ ரெடி பன்றேன் சரியா?

பா.க.ச கிரியேஷன்ஸின் "பதிவுலக தாதா ஜிந்தாபாத்"

பா.க.ச கிரியேஷன்ஸ்
பெருமையுடன் வழங்கும்

பால பாரதி


In & As


பதிவுலக தாதா
ஜிந்தாபாத்




அவ்வப்போது ஏற்படும் பதிவுலக கலாட்டாக்களை அடிதடி மற்றும் அடாவடி மூலம் தனது சகா வரவணையுடன் தீர்த்து வைப்பவர் பதிவுலக தாதா பாலபாரதி. அப்படி அடிதடிகளில் ஈடுபாடு காட்டினாலும் மாலை 9 மணியானால் தனது லேப் டாப் கம்ப்யூட்டரை திறந்து வைத்துக் கொண்டு தமிழ் ஹப் லாக் - அரிய இணைய தல விளம்பரப் பின்னூட்டத்தைப் பார்த்தவாறே மற்ற வேலைகளையும் பார்ப்பார்.




அந்த பின்னூட்டத்தைப் பார்த்த பின்னர்தான் அவருக்கு அன்றைய தினம் உறக்கமே வரும்.




அந்த அரிய இணைய தலத்தில் வைக்கப் படும் போட்டி ஒன்றில் தானும் கலந்து கொண்டு வெற்றி பெற நினைக்கிறார் பாலபாரதி. அது பிரபல வலைப் பதிவர் ஒருவரைப் பற்றிய போட்டி.


பிற மூத்த பதிவர்களையெல்லாம் கடத்திக் கொண்டு வந்து அந்த கேள்விகளுக்கான விடைகளை மிரட்டி அவர்களிடம் இருந்து கேட்டு போட்டியில் வெற்றி பெறுகிறார்.




பின்னர் அந்த வலைத் தளத்திலிருந்து பாலபாரத்திற்கு அழைப்பு வருகிறது. அங்கே வரும்போது அந்த பிரபல வலைப் பதிவர் பற்றி ஒரு சிற்றுரை ஆற்றச் சொல்கிறார்கள். இவருக்கு அந்த பிரபல பதிவரைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்காத காரணத்தால் அவரது பதிவுகளை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கிறார். அவரது பதிவுகளையே மணிக் கணக்கில் படித்தில் ஏற்பட்ட பாதிப்பால் அடிக்கடி இவருடன் (மட்டும்) அந்த பிரபலம் அடிக்கடி உரையாடுவது போலவும், இவருக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைகள் சொல்வது போலவும் இவருக்குத் தோன்றுகிறது.




இந்த சமயத்தில் மூத்த பதிவர்களுக்கான செகண்ட் இன்னிங்க்ஸ் என்னும் திரட்டியை யாரோ ஹேக் செய்துவிட இவரது இமேஜினரி கேரக்டர் சொல்லும் ஆலோசனையின் படி எப்படி போராடி அந்த திரட்டியைக் கைப் பற்றுகிறார் என்பது படத்தின் கிளைமாக்ஸ்.




இனி படத்தில் சில காட்சிகள்:




----------------------------------------------------------------------------------------


சென்னையில் யானைக் கவுளியில் ஒரு பதிவரை மிரட்டச் செல்கிறார் பாலபாரதி




அந்த பதிவர் : "என்னய்யா? எங்க பிளேஸ்லே வந்து எங்களை மிரட்டுறியா?"




பால பாரதி : "யானைக் கவுளி மட்டும் இல்லை மாமு! சென்னைப் பட்டிணத்திலே எல்லா பிளேஸும் நம்ம பிளேஸ்தான்"




----------------------------------------------------------------------------------------




தமிழ் ஹப்லாக் மூலம் பலரின் பிரச்சினனகளுக்கும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார் பாலபாரதி.




பதிவர் : "ஹல்லோ! தல வணக்கம். எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரசினை, என்னோட பிளாக்ல ஒருத்தன் தினமும் வந்து கும்மி அடிச்சிட்டுப் போறான்"




பால பாரதி அந்த உருவத்தைத் திரும்பிப் பார்க்க அவர் ஆலோசனை சொல்கிறார். அதைக் கேட்டு அந்த நேயருக்கு பாலபாரதி சொல்கிறார்.




பாலபாரதி : "தலைவா! ஒண்ணும் பிரச்சினை இல்லை! சிம்பிள்தான்! எப்பவெல்லாம் வந்து கும்மி அடிக்கிறாங்களோ அப்பவெல்லாம் உங்க பதிலா ஒரு ஸ்மைலி போடுங்க!




----------------------------------------------------------------------------------------




பதிவர் : "தலைவா! என்னோட பிளாக்ல ஒரு பயலும் கமெண்ட் போட மாட்டேங்குறான்"




இமேஜினரி உருவம் : "சிம்பிள், அவரையே வெவ்வேற பேர்ல கமெண்ட் போட்டுக்கச் சொல்லுங்க"




----------------------------------------------------------------------------------------




பாலபாரதி : "வரவ்ஸ், ஐயா வை ஆட்டோ பிடிச்சி ஏத்தி விடு, ரொம்ப நேரமாச்சு"




வரவ்ஸ்(மப்புடன்) : (அவருக்கு அந்த உருவம் தெரியவில்லை என்றாலும் கூட) "தலைவா! மெதுவா இப்படி என் கையப் பிடிச்சிகிட்டு வாங்க! ராத்திரி ஆயிடுச்சு! ரொம்ப நேரமாச்சுல்ல! நேரங்காலமால் வீடு


போய்ச் சேரு! உன் டாக்ஸிலயே உன்னை ஏத்தி விடுறேன்"




"ஏய்..டாக்ஸி... நிறுத்துப்பா... இவரை இவர் சொல்ற இடத்துலே கொண்டு போய் விட்டுடு, இதோ பாருங்க சார், டாக்ஸில பத்திரமா போய்ச் சேர்ந்ததும் தலக்கு ஒரு ஃபோன் போட்டுச் சொல்லிடுங்க, இது உங்க டாக்ஸி மாதிரி"




டாக்ஸி டிரரவர்(தலையைப் பிய்த்துக் கொண்டே) : "யோவ் யாரைய்யா கொண்டு போய் விடுறது?"




வரவ்ஸ் : "யாரையா? அது எனக்கே தெரியாது!"


----------------------------------------------------------------------------------------




மனநல மருத்துவமனையில்




டாக்டர் : "நிஜமாவே அந்த உருவம் உங்களோட பேசுதா? ஆச்சரியமா இருக்கே?"




பாலபாரதி : "அடங்கொய்யாலே! நிஜமாத்தான்யா சொல்றேன். இப்ப வேணா பாரு"


என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மகர நெடுங்குழைநாதனை மனதார பிரார்த்திக்கிறார்.




உடனே அங்கிருந்த சோஃபாவில் அந்த உருவம் தோன்றுகிறது.




----------------------------------------------------------------------------------------


ஹப்லாக் காமில் பாலபாரதி




பதிவர் : "ஹல்லோ.. பால பாரதியா...?"




பாலபாரதி : "ஆமா. வணக்கம். உங்க பிரச்சினன என்னன்னு சொல்லுங்க?"




பதிவர் : "எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்! கேக்கலாமா?"




பாலபாரதி : "தைரியமா கேளுங்க தல! இதிலென்ன தயக்கம். ம் கமான் கேளூங்க!"




பதிவர் : "பா.க.ச ன்னா என்ன தல?"




பாலபாரதி : "அடிங்! யோவ் நீ அகிலந்தானே! கடவுளே இவங்களுக்கெல்லாம் யாருய்யா லைன் கொடுக்குறது"


----------------------------------------------------------------------------------------




வரவ்ஸ் : "என்ன தல இது! யாராவது திட்டி கமெண்ட் போட்டா இன்னொரு பிளாக் அட்ரஸும் கொடுக்கணும்னு நீதான சொன்னே! இப்போ நீயே அவங்களளத் திருப்பி திட்டுறியே?"




பாலபாரதி: "ஆமாய்யா! ரெண்டு தடவைக்கு மேல திட்டுனா என்ன பண்ணுறதுன்னு ஏதும் சொல்லலையே?"




----------------------------------------------------------------------------------------




எல்லோரும் சேர்ந்து பாலபாரதியைக் கலாய்த்துக் கொண்டிருக்கும்போது


"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்" என்ற குரலுடன் அங்கே சுப்பைய்யா வாத்தியார் வருகிறார்.




"என்ன நினைச்சிகிட்டி இருக்கீங்க பாலபாரதி பத்தி! அவரு ரொம்ப நல்லவரு! நானும் ஒரு வகைல அவரோட ரசிகந்தான்! அவரை யாரும் கலாய்க்கக் கூடாது! நான் இல்லாத நேரத்துல! ஏன்னா அப்பத்தான் நானும் சேர்ந்து கலாய்க்க முடியும்" என்று பாலபாரதியை கலாய்க்கும் கும்பலில் அவரும் சேர்ந்து கொள்கிறார்.




ஆப்பு for சிபி

டெல்பின் மேடத்தையே கலாய்த்து சிரிக்க வச்ச சிபிக்கு நன்றிகள் பல சொல்லி சாரி சாரி கண்டனங்கள் பல சொல்லி இங்கு அவருக்கு எப்படியா பட்ட ஆப்புகள் எல்லாம் நாங்க வைக்க போகிறோம் என்பதை பார்கும் படி சிபியை கேட்டுகொல்கிறேன்!!!


இதை பார்த்த பிறகும் நீங்க அவர்களை கலாய்த்தால் இனி ஸ்ட்ரெய்ட்டா ICU க்கு அனுப்பி விடுவேன் என்று எங்கள் தானே தலைவர் , பாடி பில்டர் ,ஒரே நேரத்தில் ஆயிரம் பேரை பந்தாட கூடிய அபி அப்பா சபதம் எடுத்து இருக்கிறார்...(நான் தான் அவரை சமாதானம் செஞ்சு வச்சு இருக்கிறேன்) இவர நீங்க fan போட்டு பறக்க வச்சாலும்....(ஆஹா நானே உன்மைய சொல்லிட்டேனா)!!!
(ஹலோ யாருப்பா அது பின்னாடி இருந்து அவரை 24 ஆம் புலி கேசின்னு சொல்லுறது) .


கடைசியாக ரஜினி படத்தில் எல்லாம் ரிசர்வில் வைத்து இருக்கு மொட்ட வில்லன் போல நாங்க வைத்து இருப்பது எங்க தாதா சென்ஷி!
இவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெம்பு இருக்கா!!!


முதலில் சின்ன பசங்க நாங்க வைக்கும் ஆப்பு!

இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க!!!(சிபி பயபடுகிற மாதிரியாவது நடிங்க ரொம்ப உதார் விட்டு விட்டேன் உங்கள மிரட்டுகிறேன் என்று நல்ல வெயிட்டான அமவுண்ட் பேசி இருக்கிறேன் ஆளுக்கு பாதி பாதி டீல் ஓக்கேவா!!!)


இது நீங்க உட்காரும் பொழுது சீட்டில் வைக்க!!!

பாருங்க மேடம் சிபி எப்படி பயந்து போய் இருக்கிறார் என்று!!!


ம்ம்ம் அது !!!யார் கிட்ட டெல்பின் மேடத்துக்கிட்டேயே வா! இவுங்க கிட்ட வாலாட்டினா இப்படி தான்!!!

பாலபாரதி டாக்டரா ரவுடியா பருத்திவீரனா?







வலையுலக தாதா பாலபாரதி அடிக்கடி அடையாளம் தெரியாமல் இருக்க தசாவதாரம் கமலுக்கு போட்டியாக கெட்டப்புகளை மாற்றுபவர் என்பது அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும். மொருபுறம் பார்த்தால் புத்தகக் கடை மறுபுறம் பார்த்தால் வலையுக தல!. தலைக்கு தனக்குள் கமலகாசன் முட்டிக்கால் போட்டு குந்திக் கிடப்பதாக நினைப்பு போலும். வலைப்பதிவர் சந்திப்புக்கு என்றே ஸ்பெஷல் மொட்டை அடித்த பாலா இப்போது வரப்போகும் வலைப்பதிவர் பட்டரைக்கு பட்டைய கிளப்ப சில ஆலோசனைகளை குமுக வழங்குவதில் பெருமை கொள்கிறது. பதிவர் பட்டரைக்கு இந்த கெட்டப்பில் எதாவது ஒன்றில் வந்தாலும் பிற பதிவர்கள் கண்டுகொள்ள வசதியாக






படங்கள் இங்கே

குவார்ட்டர் கோவிந்தனும் பித்தானந்தாவும்!

குவார்ட்டர் கோவிந்தன்: வணக்கம் குருவே

பித்ஸ்: வணக்கம் சிஷ்யரே!

கு.கோ: நாட்டுக்கு அரசியல் தேவையா?

பித்ஸ்: தேவைதான்

கு.கோ: இன்றைய இளைஞர்கள் அரசியலில் அதிக நாட்டமில்லாமல் இருக்கிறார்களே ?

பித்ஸ்: அரசியல் என்பது கெடுதல் என்பது போல தோற்றம் உண்டாகிவிட்டது அதனால்தான். இத்தனை நாள் அரசியல் செய்தவர்களின் தவறும், அதைத் தட்டிக் கேட்கத் தயங்கியர்களின் தவறும் அதில் அடக்கம்

கு.கோ: அந்த தோற்றம் மாறுமா?

பித்ஸ்: மாறும்காலப் போக்கில் இன்னும் இரு தலை முறைகள் கூட ஆகலாம் அந்த மாற்றம்
வருவதற்கு

கு.கோ: ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இல்லாமல் புரட்சி, புரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் சொல்வது எந்த அளவுக்கு சாத்தியம்?

பித்ஸ்: புரட்சிகள் எல்லாம் இந்த நாட்களில் எடுபடாது அவை பெரும்பான்மை மக்களுக்கு புரியாத சித்தாந்தம். அவனுக்குக்காக போராடுகிறார்கள் என்பதைக் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அந்த புரட்சியின் தோற்றம் பொய்யானது போல் தோன்றுவதால்

கு.கோ: அப்படியானால் பெரும்பான்மை மக்கள் தவறானது என்று புரிந்துகொள்ளலாகுமா?

பித்ஸ்: ஆமாம். கூலி வேலைக்குச் செல்பவனிடம் கூலியை அதிகமாகக் கேட்டுப் போராடு என்று சொன்னால் உள்ள கூலிக்கும் உலை வைக்கிறான் என்ற புரிந்து கொள்ளல்தான் ஏற்படும்!

கு.கோ: இந்தச் சமூகம் ஏன் இன்னும் வரட்டு பிடிவாத குணங்களை கொண்டவர்களை ஒதுக்கிவைத்தே அவர்களை இன்னும் பிடிவாதக் காரர்களாய் ஆக்குகிறது?

பித்ஸ்: ஒதுக்குவதைத் தவிர அவர்களுக்கு வழியும் இல்லையே

கு.கோ: எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்?

பித்ஸ்: நான் ஜோதிடன் அல்ல! காண்டாக்ட் வகுப்பறை வாத்தியார் நல்லதொரு அரசியல் வாதி கிடைத்தால் நாடு பிழைக்கும்! இதைத்தான் நான் சொல்ல முடியும்!

கு.கோ: சரி சில நேரிடையான கேள்விகள்

பித்ஸ்: ஆகட்டும்!

கு.கோ: ஜெயலலிதா பற்றி?

பித்ஸ்: "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
அசட்டுத் துணிச்சலும், அகம் கொண்ட பகையும் அரசியலுக்கு உதவாது என்று உணர்ந்தவர்.
உணர்த்தியவரும் அவரே!

கு.கோ: கருணாநிதி பற்றி?

பித்ஸ்: நல்ல கலைஞன் எழுத்துக்களால். நிர்வாகத் திறன் போதாது. பற்றறுக்காதிருந்ததால் சிற்சில சோதனைகளைச் சந்திக்கும் மனிதன்

கு.கோ: வைகோ?

பித்ஸ்: அழுது அடிம்பிடிக்கும் குழந்தை! ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுத்தவன்!

கு.கோ: ராமதாஸ்?

பித்ஸ்: ம். உமக்கு ஏதோ உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. இருந்தாலும் சொல்கிறேன்.
தனித் தமிழுக்காகப் செயல் அளவில் சிறிதளவேனும் தானும் முயற்சித்துப் பார்த்தவர். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தவாரே எதிர்க் கட்சியின் பனியையும் சேர்ந்து செய்கிறார்! (எதிர்க் கட்சியினர் செய்வதில்லை)

கு.கோ: விஜயகாந்த்?

பித்ஸ்: திரைப்படங்களில் மட்டும் ஹீரோ! அரசியலில் காமெடியன்!

கு.கோ: ரஜினி அரசியலுக்கு வந்தால்?

பித்ஸ் : அவரும் கோமாளிதான்!

கு.கோ: சரி இனி சில வலையுலக கேள்விகள்

பித்ஸ் : ஆகட்டும்

கு.கோ:தமிழ் பதிவுகள் குறித்து?

பித்ஸ் : நல்ல பொழுதுபோக்கு சிலருக்கு, செய்தி ஊடகம் சிலருக்கு

கு.கோ:தமிழ் பதிவர்கள் குறித்து?

பித்ஸ் : இணையத்தில் கிடைத்த இணையற்ற உறவுகள்

கு.கோ: கும்மிப் பதிவுகள் பற்றி?

பித்ஸ் :ஒரு நாளின் ஒட்டு மொத்த மன இறுக்கத்தையும் தளர்த்துவிடும் பூங்காக்கள்

கு.கோ: அரசியல் பதிவுகள்?

பித்ஸ் : இன்பத்திலும் கொஞ்சம் துன்பம்
சோதனைகள் இல்லாத வாழ்வு ஏது?

கு.கோ: பின்னூட்ட கயமைத்தனம் ?

பித்ஸ்: ஹிஹி கவன ஈர்ப்புத் தீர்மானம்

கு.கோ: சொந்த செலவில் சூனியம் வைக்க செய்யவேண்டியது?

பித்ஸ்: உண்மைத் தமிழனிடம் கேட்க வேண்டிய கேள்வி

கு.கோ:தனக்குத் தானே பின்னூட்டம் போட்டுக்கொள்வது?

பித்ஸ் : கையறு நிலைப் படலம்

கு.கோ: எத்தனை தூரம் விளக்கிச் சொன்னாலும் நான் சொல்வது சரிதான் என வாதிட்டு அடிவாங்க சலிக்காமல் அடுத்த பதிவிலும் உளருபவர்கள் பற்றீ?

பித்ஸ்: அவரவர் இயல்பு அவரவர்க்கு

கு.கோ:சிறந்த மொக்கைப் பதிவர்?

பித்ஸ்: பித்தானந்தா

கு.கோ:சிறந்த அரசியல் பதிவர்?

பித்ஸ்: மகேந்திப்ரன்.பெ

கு.கோ: ஏன்?

பித்ஸ்: அவர்தான் அரசியலை நன்றாகக் கலாய்க்கிறார்
நன்கு புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே அது இயலும்

கு.கோ: ஆனால் உள்ளே ஒன்றும் விஷயம் இல்லை என்று சொல்கிறார்களே?

பித்ஸ்: ஒன்றும் இல்லாததில்தான் எல்லாம் இருக்கிறது

கு.கோ: தமிழ் பதிவர்கள் பற்றி ஒரு பஞ்ச்

பித்ஸ்: உதவும் உள்ளங்கள் மிகுந்திருக்கும்

கு.கோ: இத்தனை கேள்விகளுக்கும் மிக நல்ல பதிலை சொன்ன உங்களுக்கு என் நன்றி
பித்ஸ்: நல்லது. இத்தனை கேள்விகள் சளைக்காமல் கேட்ட உமக்கும் எமது நன்றி

இது யாரு ஷூ

இது யாருடைய ஷூ என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு இந்த ஷூ பரிசாக வழங்க படும்...











சங்க அறிமுகம்

குசும்பன் :என்ன தளை கும்பலா போனிங்க போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்க...இல்லப்பா அங்க நோ என்ட்ரீ போர்ட் போட்டு இருக்காங்க...

சிபி: ஆமா நீ எங்கயோ போறேன்னு சொன்ன

அங்கயும் நோ என்ட்ரீ தள

சிபி : ஆஆஆ இப்படி போற இடத்துல எல்லாம் நோ என்ட்ரீ நமக்கு போட்டாஎன்ன ஆவுறது அப்புறம் எங்க வண்டி எங்க ஓட்டுறதாம்...

இத சட்ட படி சந்திப்போம் தள கவலைய விடுங்க...


நாளைக்கு பொதுக்குழுவ கூட்டுறோம்...


இனி சங்கத்தினை பற்றி


கழக கொடி:

கழக புத்தகம்: ஒன் அண்ட் ஒன்லி கும்மி. (இது சங்க வரலாறு புத்தகம்)

கழக பாட்டு : கும்மி அடி ஏ கும்மி அடி கொஞ்சும் குளவைய (12Bயில் வரும் பாட்டு)நிதி சேர்ந்த பிறகு A.R. ரஹுமான் இசையில் ஒரு சங்க பாட்டு வரும் அது வரை இந்த பாட்டை கழக பாட்டாக அறிவிக்கிறோம்.


கும்மி மக்களுக்கு ஒரு நற்செய்தி...இனி மொக்கை போடனுமா?கவுஜ விளக்கம் போட வேண்டுமா? இதோ இங்க வாங்க... கை வலிக்க கும்மி அடிங்க உங்க கவலை எல்லாம் மறங்க...

இனிய உதயம்!

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
கும்மியடிக்கும் பதிவர்கள், நல்ல அனானிகள் மற்றும் கும்மியை விரும்பும் பதிவர்கள் ஆகியோரின் பேராதரவோடு
இன்று முதல்
இனிய உதயம்
கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்